Chotta Chotta
C. Sathya
4:27தாமிரபரணியில் நீந்தி வந்த என் ஆழம் பூவிலே ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு கை வீசி போறவளே கரட்டு காட்டுக்குள்ள முளைச்ச நெல்ல போல மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச கொசுவம்போல என்னை பின்ன வச்சு முடியரியே பெருக்கா முழியே அடியே உருவாஞ்சுருக்கே பத்து பனிரெண்டு மணி வரை நானும் கண்டபடி திரிஞ்சேன் பொட்ட புள்ள இவ பாத்துட்டு போனா பொட்டிக்குள்ள அடஞ்சேன் ஒத்த துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி இஷ்டப்படி கிடந்தேன் ஒட்டுக்கன்னி இவ சிரிச்சுட்டு போனா எட்டு முறை குளிச்சேன் மருதாணி இலை போல என் மனச நெசக்குற அருக்கானி அழகாத்தான் என் உசுரில் குளிக்குற ராட்டின தூரிய போல என்னை அடி ஏண்டி உருள விட்ட பொள்ளாச்சி சூட்டு தச்சு கண்காட்சி பாக்கையில அன்னாசி பழம்போல என்னை வெட்டி தின்ன அடி அடியே கொடுவா நுனியே அடியே கருவா உளியே சல்லி பய இவன் மனசுல நீ தான் மல்லிச்செடிய வச்ச ஓட்டக்காசு என்னை உருப்படியாக்கி நெஞ்சுக்குழியில் வச்ச அடி போடி உன்ன பாத்தா ஒரு கிறுக்கு புடிக்குதே தல மேல ஒரு மேகம் அட தமுக்கு அடிக்குதே கோழிய போல என் உறக்கத்த நீ அடி வெரசா முழுங்குறியே வித்தார கள்ளி உன்ன கொத்தாக அள்ளி வந்து பொத்தானப்போட்டு ச்சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா கனியே தனியே அருவா முழுங்கும் விழியே