Nallaavi
Jafi
3:50ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே