Uppukathu

Uppukathu

Mahanathi Shobana

Альбом: Arogara
Длительность: 7:13
Год: 1999
Скачать MP3

Текст песни

ஆஆ ஆஆ

உப்புக் காத்து ஊதக் காத்து
சுத்தும் கடல் கரைய பாத்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா
வாட கத்து வீச பாத்து
அலையை எடுத்து வலயப் போட்டு
மீன் பிடிக்கும் தொழில் நடக்குது முத்தய்யா
கரை மீண்டு வர காவல் உந்தன் வேலய்யா
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா
மால்மருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா
வடிவழகா

சமுத்திரம் போன மச்சான்
சேமத்துடன் திரும்பி வர
சமுத்திர சாமி உந்தன் சன்னதியில்
வேண்டி நின்றேன்

ஒத்தயில தவிக்க விட்டு
பெத்த புள்ள உறவு விட்டு
கடலுக்கு போன மச்சான்
கரையேற ஏங்குகின்றேன்
காத்து கொஞ்சம் பலமடைஞ்சா
கட்டுமரம் ஆடுமய்யா
ஏழை எங்க குடிசையெல்லாம்
வெட்ட வெளியாகுமய்யா
செந்தூரில் நீயிருக்க
என்ன குறை நேருமய்யா
கோவில் மணி கேட்டிருந்தா
வாழ்வில்லில்லை துன்பமய்யா
வலையில் வந்து விழுந்திடனும் மீனு
விலை போனா பசிக்கு அது சோறு

உப்புக் காத்து ஊதக் காத்து
சுத்தும் கடல் கரைய பாத்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா
மால்மருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா
வடிவழகா

தென்னை ஒன்னு நட்டு வெச்சு
தண்ணீர் தினம் நினைச்சோம்
பின்னால பலன் தரும்னு
அண்ணாந்து பாத்து நின்னோம்

கண்ணீர தேக்கிவெச்சு
உப்பளத்தில் பாச்சி வெச்சோம்
உப்பாக வெளையுமுன்னு
ஊர் பார்க்க எங்கி நின்னோம்
தென்னையென கந்தன் உனை
எண்ணத்துல வெச்சிப்புட்டோம்
பக்தியெனும் நீரிறைச்சு
வேர்பிடிக்கப் பாடுபட்டோம்
உப்பளமாய் உன் தளத்தை
உள்ளத்துல வெச்சிப்புட்டோம்
கண்ணீர காலடியில்
காணிக்கையா சேர்த்துபுட்டோம்
மெழுகெனவே உருகுகிறோம் முருகா
அழுகை வர பார்ப்பதுவும் அழகா
உப்புக் காத்து ஊதக் காத்து
சுத்தும் கடல் கரைய பாத்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா
மால்மருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா
வடிவழகா

சொத்து பத்து சேத்து வைக்க
சித்தத்துல எடமுமில்ல
பத்து ஒண்ணு போடாம
பார்த்திடத் தான் வேண்டுகின்றேன்

முத்துமணி ரத்தினமே
மூனுவடம் தேவை இல்லை
முப்பொழுதும் உன் தயவு
இருந்திட விரும்புகிறேன்
ஆழக்கடல் நீ கிடந்து
அரசாள வந்தவனே
அதுபோல என் மனசில்
குடியேற வாருமய்யா
சம்ஹார நேரத்தில சமுத்திரம் பின் வாங்கும்
சந்தோஷ திருநாளில் நல்லருளை தாருமய்யா
முருகனென்று முழங்குது என் மனசு
கடலபோல உன் கருணை பெருசு

உப்புக் காத்து ஊதக் காத்து
சுத்தும் கடல் கரைய பாத்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பைய்யா
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீயய்யா

திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா
மால்மருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமெனவே வடிவழகா
வடிவழகா
வேல்முருகா வேல்முருகா