Mannaanalum
T M Sounderrajan
4:58தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே முருகய்யா அங்கம் மணக்கவில்லையே அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே முருகய்யா அங்கம் மணக்கவில்லையே சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல சீர் மணம் வேறு இல்லையே குமரய்யா சீர் மணம் வேறு இல்லையே முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற் பொருளாகவில்லையே முருகய்யா முதற் பொருளாகவில்லையே சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா மெய்ப் பொருள் வேறு இல்லையே எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா எண்ணத்தில் ஆட வில்லையே எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா எண்ணத்தில் ஆட வில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே குமரய்யா மற்றொரு தெய்வமில்லையே தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா