Ninnukori Varanam
Ilaiyaraaja
4:38அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததிகின ததிகின ததிகின தகத்தோம் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம் அதில் முத்து எடுப்பவன் கஷ்டம் இந்த ஊருக்கு தெரியாது உள் மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம் இது யாருக்கும் புரியாது ஒன்னும் இல்லாம ரெண்டும் இல்ல ஆணில்லாம பெண்ணும் இல்ல பெண்ணில்லாம யாரும் இல்ல துன்பம் இல்லா பேரும் இல்ல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததிகின ததிகின ததிகின தகத்தோம் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு என்றும் வாழணும் பல்லாண்டு ஒரு மல்லிகை மெத்தையை போட்டு அந்த மன்மதன் வித்தையை காட்டு நான் கேட்கணும் தாலாட்டு ஆடை இல்லாத உடலும் இல்ல அலை இல்லாத கடலும் இல்ல ஓசை இல்லா மணியும் இல்ல பாசம் இல்லா மனசும் இல்ல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததிகின ததிகின ததிகின தகத்தோம் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததிகின ததிகின ததிகின தகத்தோம் அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்