Yesuvin Namam
Jesintha
4:05நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு ஈசாக்கு விதை விதைத்து நூறுமடங்கு அறுவடை செய்தான் உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே(ளே) ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு தேசத்தில் பலுகும்படி உனக்கு இடம் உண்டாக்கினேன் ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார் என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல் (அறிக்கை செய்வார்கள்) கலங்காதே நான் உன்னோடு இருக்கிறேன் மகனே பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் உனக்கு எதிரானோர் உன் சார்பில் வருவார்கள் சமாதானம் செய்வார்கள் – உன்னோடு