Unnai Thaney Thanjam (From "Nallavanukku Nallavan")

Unnai Thaney Thanjam (From "Nallavanukku Nallavan")

K. J. Yesudas, Manjula, Vaali, Muthulingam, Na.Kamarajan, Gangai Amaran, And Vairamuthu

Длительность: 4:12
Год: 1984
Скачать MP3

Текст песни

உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

உன்னைத்தானே

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே
இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா

என்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு

என்னைத்தானே

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே

என்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு

என்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே