Ailasa Ailasa
Anirudh Ravichander
4:07நீல மழை சாரல் தென்றல் நெசவு நடத்தும் இடம் நீல மழை சாரல் வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன் கானம் குறைந்துவரும் மௌன திருவெளியில் ஒரு ஞானம் வளர்த்துருந்தேன் இதயம் எரித்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன் சிட்டு குருவி ஒன்று சினேக பார்வை கொண்டு வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது ஒற்றை சிறு குருவி நடத்தும் ஓரங்க நாடகத்தில் சற்றே திளைத்திருந்தேன் கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது ஒரு நாள் கனவில் இது பேரற்ற பேர் உறவோ யார் வரவோ நீ கண் தொட்டு கடந்திடும் காற்றோ இல்லை கனவில் நான் கேட்க்கும் பாட்டோ இது உறவோ இல்லை பரிவோ நீல மழை சாரல் னனன னனன னா அழகை அசைத்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது முகிலில் சர சர சரவென்று கூட இடி வந்து பட பட படவென்று வீழ மழை வந்து சட சட சடவென்று சேர அடை மழை காட்டுக்கு குடயில்லை மூட வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன சிட்டு சிறுகுருவி பரந்த திசையும் தெரியவில்லை விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன் விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் உயிர் நனைந்தேன் நனைந்தேன் அந்த சிறு குருவி இப்போது அலைந்து துயரப்படுமோ துயரப்படுமோ இந்த மழை சுமந்து அதன் ரெக்கை வலித்திடுமோ வலித்திடுமோ காற்றில் அந்நேரம் கதையே வேறு கதை கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்து கான் சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டி போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது அழுதது கான் காற்றில் அந்நேரம் கதையே வேறு கதை கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்து கான் சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டு போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது கான்