Nee Kaatru Naan Maram
Vidyasagar, Vairamuthu, K. S. Chithra, And Hariharan
5:11நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன் நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன் நீ விழி நான் இமை உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன் நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்த் தொட அனுமதிப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன் நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன் நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன் நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன் நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்